சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-16555

எனவே, சினையும் முதலும் தம்முள் மயங்கி வருதல் வழு என்பதாயிற்று.
உறழ்பொருள் ஆவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படுவது. துணைப் பொருளாவது
ஒப்புமை கூறப்படுவது.

எ-டு: இவள் கண்ணின் இவள் கண் பெரிய-நும் அரசனின் எம் அரசன் முறை
செய்யும்- எனவும்,

இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ? எம் அரசனின் நும் அரசன் முறை
செய்யுமோ? எனவும்,

இவள் கண் ஒக்கும் இவள் கண்- எம் அரசனை ஒக்கம் நம் அரசன்- எனவும்,

இவள் கண் ஒக்குமோ இவள் கண்? எம் அரசனை ஒக்குமோ நும் அரசன்?
எனவும் வரும்.
 

  ‘அவன், கோலினும் தண்ணிய தடமென் தோளே’ பட்டினப்.301
எனவும்,
 
  ‘துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே’ குறுந்.222

எனவும் மயங்கி வந்தன வழுவாம்பிற எனின், அவை செய்யுள் பற்றி வரும் உவமை
வழு ஆதன் ஈண்டைக்கு எய்தா என்க.

இம்மகள் கண் நல்லவோ? கயல் நல்லவோ? என வழக்கின்கண்ணும் மயங்கி
வருமாலோ எனின், உண்மை உணர்தற்கு வினாயது அன்றி ஐயஉவமை வாய்பாட்டான்
கண்ணைப் புனைத்து உரைத்தல் கருத்து ஆதலின், அன்னவை எல்லாம் உரை என்னும்
செய்யுளாம் என்க.

தன்னினம் முடித்தல் என்பதனான் பொன்னும் துகிரும் முத்தும் மணியும் என
எண்ணுங்காலும் இனமாய பொருளே எண்ணப்படும் என்பது கொள்க. 15