சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

56 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்:
 


 
முழுதும் -
‘ஒருபொருள் குறித்த பல சொல்லாகியும்
பல்பொருள் குறித்த ஒருசொல் லாகியும்
அரிதுஉணர் பொருளன திரிசொல் ஆகும்.’

‘திரிசொல் ஒருபொருள் தெளிபல சொல்லும்
பலபொருட்கு ஒருசொல்லும் பயன்படற்கு உரியன.

‘ஒருபொருள் குறித்த பலசொல் லாயும்
பலபொருள் குறித்த ஒருசொல்லாயும்
எனஇரு பாற்றே திரிசொற் கிளவி.’
தொல்.சொல்.399


நன். 271

தொ.வி. 44




மு.வீ.ஒ. 50
 

திசைச்சொல்
 

174செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம்குறிப் பினவே திசைச்சொல் என்ப.
 
 

இது நிறுத்த முறையானே இயற்சொல்லும் திரிசொல்லும் உணர்த்தி, அவற்றின்
பகுதியாய் இடைநின்ற பெயர்வினை இடைஉரி நான்கனையும் மேல் உணர்த்திய நிறீஇ,
என்றாகிய இரண்டனுள் திசைச்சொல் ஆமாறு உணர்த்துகின்றது.

இ-ள்: செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந் தமிழ் நாடு பன்னிரண்டன் கண்ணும்,
பதிணென் நிலத்துள் இருவகைத்தமிழாய் ஒருமொழி நிலத்தை ஒழிந்த மற்றைப் பதினேழ்
நிலத்தின்கண்ணும் தத்தம் குறிப்பினான் வழங்குவனவற்றைத் திசைச்சொல் என்று
சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.

செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனையும்,