சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

562 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

அடைமொழி பற்றிய
மரபு வழாநிலையும் வழுவமைதியும்
 

312. பொருள்முதல் ஆறுஆம் அடைசேர் மொழிஇனம்
உள்ளதற்கு உரித்துஇல் லதற்கும் ஒரோவழி.

 

இது விசேடிக்கும் சொல் இனம் உள்ளதற்குக் கொடுத்தல் அது அதன்
பொதுமையின் நீக்கி விசேடித்தலின் மரபாம் ஆகலான் உரித்து என்றும், இனம்
இல்லதற்குக் கொடுத்தல் அது அதன் பொதுமையின் நீக்கி விசேடித்தல் இன்றுஆயினும்
செய்யுட்கண் அணியாய் வழக்கின்கண் பட்டாங்கு படவும் நிற்றலின் சிறுபான்மை உரித்து
என்றும் மரபு வழாநிலையும் மரபுவழுஅமைதியும் கூறுகின்றது.

இ-ள்: பொருள் முதலாகிய ஆறனையும் அடையாக அடுத்துவரும் சொல் இனப்
பொருளைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படும் பொருட்கு உரித்தாம்; அங்ஙனம்
விசேடிக்கப்படாத பொருட்கும் ஒரோ விடத்து உரித்தாம், இருவகை வழக்கின் கண்ணும்
என்றவாறு.
 

  எ-டு:
‘பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்’.

‘கான்யாற்று அடைகரை’

‘முந்நாள் பிறையின் முனியாது வளர்ந்தது’

‘கலவமா மயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன
காயா’

‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு இவள்’

‘ஆடுபாம்பு எனப்புடை அகன்ற அல்குல்மேல்’
குறள்.913

இனியது நாற்.5




சீவக.1558

குறுந்.18

சீவக.1007
எனவும்,