சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

566 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இற்று என்பது வினைக்குறிப்பு வாய்பாடு ஆயினும், உளரும் உணரும் என்னும்
தெரிநிலை வினையும் இற்று என்னும் பொருள்பட நிற்றலின், இற்று எனக் கிளத்தலே
யாம் என்பது.

சேற்று நிலம் மிதித்து வன்னிலம் மிதித்தான் நிலம் வலிதாயிற்று என்றவழி,
மெலிதாயது வலிதாய் வேறுபட்டது என ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின்
செயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததாம் அல்லது இயற்கைப் பொருள் ஆக்கமொடு
வந்தது அன்றாம்.

ஆக்கம் காரணம் இன்றியும் வழக்கிடைப் போக்கு இன்று எனவே செய்யுளிடத்து
ஆக்கமும் காரணமும் பெற்றே வரும் என்பதாயிற்று.
 

  ‘வருமழைய வாய்க்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக்
கருமுருகன் சூடிய கண்ணி- திருநுதால்
இன்றென் குரல் கூந்தல் பெய்தமையால் பண்டைத்தம்
சாயல ஆயின தோள்’

 

என இது காரணமும் ஆக்கமும் பெற்றது.

உம்மை எதிர்மறை ஆகலான், வழக்கிடத்தும் காரணம் கொடுத்துச் சொல்லுதலே
வலியுடைத்து என்பது.
 

  ‘அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே’
குறுந்.77
எனவும்,
 
  ‘நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு’
குறள்.375

எனவும் செயற்கைப் பொருள் செய்யுளிடத்துக் காரணம் இன்றியும்,