சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

570 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

அடைசினைமுதல் தம்முள் தொடரும் மரபு
 

314. அடைசினை முதல்முறை அடைதலும் ஈர்அடை
முதலோடு ஆதலும் வழக்கியல் ஈர்அடை
சினையொடு செறிதலும் மயங்கலும் செயுட்கே.
 

 

இஃது அடையும் சினையும் முதலும் தம்முள் தொடரும் வழிப் படுவதொரு மரபு கூறுகின்றது.

இ-ள்: பண்புச் சொல்லும் சினைச் சொல்லும் முதற் சொல்லும் இங்ஙனம்
கூறப்பட்ட முறையே தொடர்தலும், இரண்டு பண்புச் சொல் முதற் சொல்லோடு
தொடர்தலும் வழக்கிடத்து மரபாம். இரண்டு பண்புச் சொல் சினைச் சொல்லோடு
தொடர்தலும், பிறவாறு மயங்கித் தொடர்தலும் செய்யுளிடத்து மரபாம் என்றவாறு.

வரலாறு: செங்கால் நாரை- நெட்டிலைத் தெங்கு- பெருந்தலைச் சாத்தன் எனவும்,

‘சிறு கருங் காக்கை’ (ஐங்குறு.391) இளம் பெருங் கூத்தன் எனவும்,
 

  ‘சிறுபைந் தூவியின் செயிர்அறச் செய்த’

‘கருநெடுங் கண்தரும் காமநோயே’

 
எனவும்,
 
  ‘கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையும் கூகையும் கூடி’
புறம்.238

எனவும்,
 
  பெருந்தோள் சிறுநுசுப்பின் பேர் அமர்க்கண் பேதை’ 20

எனவும் வரும். பிறவும் அன்ன.