சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

572 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பண்பும் சினையும் முதலும் முறையே
மயங்காது இயலும் வண்ணச் சினைச்சொல்.’
 

மு.வீ.ஒ.62
 

இனைத்தென்றறி பொருள் முதலியவற்றின்
மேல்சொல் நிகழ்த்தும் மரபு
 

315. இனைத்து என்று அறிபொருள் உலகி னிலாப் பொருள்
வினைப்படு தொகுதிக் கண்ணும் பொருள்முதல்
அவற்றொடு படுத்தற் கண்ணும் முறையே
முற்றும் எச்சமும் ஆய்ஈர் உம்மையும்
தெற்றெனப் பெறுதல் செவ்விது என்ப.

 

இதுவரையறை உடைய பொருள்மேலும் உலகத்தில் இல்லாத பொருள்மேலும்
சொல் நிகழ்த்துழிப் படுவது ஒரு மரபு கூறுகின்றது.

இ-ள்: கேட்போரான் இத்துணை என்று அறியப்பட்ட பொருள் முதலிய
அறுவகைப் பெயர்களும் உலகத்து இல்லாத பொருள்களும் முடிக்கும் சொல்லொடு படும்
தொகுதிப் பெயர்க்கண்ணும், பொருளும் இடமும் காலமும் முதலியவற்றொடு படுத்துக்
கூறுதற்கண்ணும் முறையே முற்றும் எச்சமும் ஆகிய அவ்விரண்டு உம்மையும் தெளியப்
பெறுதல் மரபு என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

  எ-டு: தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்-
உலகம் மூன்றும் ஒருங்கு உணர்ந்தான்-
காலம் மூன்றும் கண்டான்-
கண் இரண்டும் சிவந்தான்-
சுவை ஆறும் உடைத்து இவ்வடிசில்-
கதி ஐந்தும் உடைத்து இக்குதிரை.

 
எனவும்,