எனவும் முறையே இனைத்து என்று அறிபொருள் முற்றும்மையும் உம் உலகின் இலாப் பொருள் எச்ச உம்மையும் பெற்று வந்தவாறு காண்க. பிறவும் அன்ன. ‘இனைத்து என்று அறிபொருள்’ எனவே, முன் அறியப்படாக்கால் தமிழ்நாட்டிற்கு வேந்தர் மூவர் எனவும், பொருள் முதலியவற்றொடு படுத்தற்கண் எனவே, அவற்றொடு படுத்தாதவழிப் பவளக்கோட்டு நீலயானை இல்லை எனவும் உம்மை பெறாதும் வரும் என்பதாம். நான்மறை முதல்வர் வந்தார்- ஐந்தலைநாகம் உடன்றது என்புழி இனைத்து என்று அறிபொருள் ஆயினும் வினைப்படு தொகுதி அன்மையின் உம்மை பெறா ஆயின. அஃதேல், |