சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

576 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘இனைத்தென் றறிந்த சினைமுதல் பேர்க்கெல்லாம்
வினைப் படுப்பின் உம்மை மிகும்.’

‘இனைத்தென றறிபொருள் உலகினி லாப்பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும்.’

‘வரைப்படும் எண்ணும் வையகத்து இல்லவும்
வினைப்படின் உம்மை வேண்டும்.’

‘இனைத்தென அறிந்த சினைக்கும் முதற்கும்
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.’

‘இல்லாப் பொருளும் அன்ன இயற்றே.’
நே.சொல்.12


நன்.399


தொ.வி.135


மு.வீ.ஒ.67

மு.வீ.ஒ.68


மரபு வழுக்காத்தல்...........(316-325)
சுட்டுப்பெயர் வரும்முறை
 

316. படர்க்கைமுப் பெயரோடுஅணையின் சுட்டுப்
பெயர்பின் வரும்வினை எனின்பெயர்க்கு எங்கும்
மருவும் வழக்கிடைச் செய்யுட்கு ஏற்புழி.

 

இஃது ஒருபொருள் உணர்த்தும் இருபெயரிடத்து வழுவற்க எனவும் காக்கின்றது.

இ-ள் படர்க்கை இடத்த ஆகிய உயர்திணைப் பெயரும் விரவுப்பெயரும்
அஃறிணைப்பெயரும் ஆகிய மூன்று பெயரோடும் சுட்டுப் பெயர் தொடர்ந்து வருமாயின்,
அங்ஙனம் வரும் இடத்து ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினைகொண்டு
முடியுமாயின் சுட்டுப்பெயர் அம் மூவகைப் பெயர்க்கும் பின்னாகவரும்; அவ்வாறு
முடியாது பெயர்கொண்டு முடியுமாயின், அம்முடிபிற்கு முன்னும் பின்னும் வரும்,
வழக்கிடத்து; செய்யுளிடத்து இவ்வரையறை இன்றி முன்னும் பின்னும் வரும் என்றவாறு.

ஏற்புழிக் கோடலான் அம்மூவகைப் பெயர்களின் பின் நிற்றற்கு உரிய
அகரச்சுட்டே கொள்க.