சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-22577

எ-டு: நம்பி வந்தான் அவற்குச்சோறுகொடுக்க- நங்கை வந்தாள் அவட்குப்
பூக்கொடுக்க எனவும்,
 

  எருது வந்தது அதற்குப் புல்இடுக-
குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க எனவும்,
சாத்தன் வந்தான் அவற்குச் சோறுகொடுக்க-
சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க-
மூடவன் வந்தான் அவற்குச் சோறுகொடுக்க-
முடத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க-

 
எனவும்,

நம்பி அவன் அவன் நம்பி- நங்கை அவன் அவள் நங்கை- எனவும்,

எருது அது அதுஎருது- குதிரைஅது, அதுகுதிரை- எனவும், சாத்தன் அவன்,
சாத்தன்அது அவன்சாத்தன், அதுசாத்தன்- சாத்திஅவள், அவள்சாத்தி, அதுசாத்தி
எனவும் முறையே காண்க.

அவன் வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க எனின், அவனும் நம்பியும் வேறாய்
அவன் வருந்துணையும் நம்பி சோறு பெறாது இருந்தான் ஆவான் செல்லும் ஆதலின்,
அங்ஙனம் கூறற்க என மரபு வழுவற்க என்றவாரும் என்பது.
 

  ‘அவன் அணங்குநோய் செய்தான் ஆயிழாய் வேலன்
விறல்மிகுதார்ச் சேந்தன் பேர்வாழ்த்தி- முகன்அமர்ந்து
அன்னை அலர்கடப்பந் தார்அணியின் என்னைகொல்
பின்னை அதன்கண் விளைவு’

 

எனச் செய்யுட்கண் சுட்டுப்பெயர் முன்வந்தது. பின் வருதல் வந்துழிக் காண்க. சேந்தன்
இயற்பெயர். செய்யுள் ஆதலின் அமைக என வழு அமைத்தவாறாம் என்பது.