படர்க்கை முப்பெயரும் சுட்டுப்பெயரும் ஒன்றனை ஒன்று கொண்டு முடியும் இடத்து, நம்பி அவன், அவன் நம்பி என்று எதனை முற்கூறினும் அமையும். இரண்டும் வெவ்வேறு வினை கொள்ளும் இடத்து மூவகைப் பெயர்களையும் முன்னும், சுட்டுப்பெயர்களைப் பின்னும் கூறுதல் வேண்டும். வழக்காறு நோக்கி அ, இ, உ- என்ற சுட்டு மூன்றனுள் அகரச்சுட்டே கொள்ளப்பட்டது. நம்பி நங்கை என்ற உயர்திணைப் பெயரும், எருது குதிரை என்ற அஃறிணைப்பெயரும், சாத்தன் சாத்தி முடவன் முடத்தி என்ற விரவுப்பெயரும் |