நிறுத்தமுறை- 171 ஆம் நூற்பாவில் நிறுத்தமுறை. இருவகைத்தமிழ்- செந்தமிழ், கொடுந்தமிழ். தென்பாண்டி நாடு முதல் புனல்நாடு ஈறாகிய பன்னிரண்டும் கொடுந்தமிழ்நாடு என்று மயிலைநாதர் முதலிய நன்னூல் உரையாசிரியர்கள் கொண்டனர். தொல்காப்பியம் உரையாசிரியர்கள் வேணாட்டையும் புனல்நாட்டையும் நீக்கி, பொங்கர்நாடு ஒளிநாடு என்பனவற்றைக்கொணடனர். உரையாசிரியர் பொதுங்கர்நாடு என்று பொங்கர் நாட்டைக் குறிப்பிடுகின்றார். இவ்வாசிரியர் தமிழ்ஒழி பதினேழ் நிலங்கள் பற்றி மயிலைநாதர் உரைத்தனவற்றையே தாமும் உரைத்தார். மயிலைநாதர் மேலும், |