சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

582 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளும்வழி எதனையும்
முற்கூறலாம். ஆனால் இரண்டும் வேறு ஒரு வினை கோடற்கண் சிறப்புப்பெயரை
முன்னும் இயற்பெயரைப் பின்னும் கூறலே முறை. இருபெயரொட்டுப்
பண்புத்தொகைக்கண் இம்முறை மாறியும் வரலாம். அது புதியது புகுதலாம்.

குன்றவன்- திணைப்பெயர். அருவாளன்- நிலன், பார்ப்பான்- சாதி, சேரமான்-
குடி, ஊர்கிழான்- உடைமை முனிவன்- தவம், நாடகி- தொழில் (நாடகம் ஆடுவோன்),
புலவன்- கல்வி, குருடன்- சினை, மெய்யன்- குணம்.
 

  ஏனாதி- மன்னர் முதலாயினார் தரும் சிறப்பு.
மாந்தன்- இயற்பெயர்; கொங்குஏனாதி-சிறப்புப்பெயர்
திருவீரன்- இயற்பெயர்; ஆசிரியன்- சிறப்புப்பெயர்.
 

 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.’

‘சாதி முதலாம் சிறப்புப்பேர் தம்முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து.’
‘திணைநிலம் சாதி குடியே உடைமை
குணம் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு,
இயற்பெயர் ஏற்றிடின் பின்வரல் சிறப்பே.’

‘வினைக்குஒருங்கு இயலும் விழுமிய பொருட்கும்
இயற்பெயர் முற்பட இயம்பின் ஆம் வழுவே.’
தொல்.சொல்.41


நே.சொல்.14


நன்.393, தொ.வி.197


மு.வீ.ஒ.73