சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-25585

வேறுவினைப் பொதுச்சொல்
 

319. வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொல்லும்
வேறுஅவற்று எண்ணும்ஓர் பொதுவினை வேண்டும்.

 

இதுவும் ஒரு மரபு வழுவற்க எனக்காக்கின்றது; வேறு வினைப்
பொதுச்சொற்களையும் வேறு வினைப்பொருள்களைப் பொதுச்சொல்லால் கூறாது பிரித்து
எண்ணும் இடத்தும் ஒருசார்க்கு உரிய வினைச்சொல்லால் சொல்லினும் எண்ணினும்
வழுவாம் ஆகலின், இவை பொதுச்சொல்லால் சொல்லவும் எண்ணவும்படும் என்றலின்.

இ-ள்: வேறுபட்ட வினையை உடைய பலபொருள்களையும் ஒருங்கு தழுவிநிற்கும்
பொதுச்சொற்களும், வேறுபட்ட வினையை உடைய பொருள்களைப் பொதுச்சொல்லால்
கூறாது பிரித்து எண்ணும் இடத்தும், அவற்றுள் யாதானும் ஒன்றற்கு உரிய வினையால்
கூறப்படாது, அவற்றை எல்லாம் உள்அடக்கி நிற்கும் பொதுவினையால் கூறப்படும்
என்றவாறு.

வரலாறு: அடிசில் என்பது உண்பன- தின்பன- நக்குவன- பருகுவனவற்றிற்கும்,

அணி என்பது கட்டுவன- கவிப்பன- செறிப்பன- பூண்டனவற்றிற்கும்,

இயம் என்பது கொட்டுவன- ஊதுவன- எழுப்புவனவற்றிற்கும்,

படை என்பது எய்வன- எறிவன- வெட்டுவன- குத்துவனவற்றிற்கும் பொது
ஆகலான்,

அடிசில் அயின்றார்- மிசைந்தார்- கைதொட்டார் எனவும்,