| அணி அணிந்தார்- மெய்ப்படுத்தார்-எனவும், இயம் இயம்பினார்- படுத்தார்- எனவும், படை வழங்கினார்- தொட்டார்- எனவும், சோறும் கறியும் அயின்றார் எனவும், யாழும் குழலும் இயம்பினார் எனவும், | |
பொதுவினையால் கூறப்பட்டவாறு காண்க. |
| அடிசில் தின்றார்- பருகினார்- எனவும், அணி கவித்தார்- பூண்டார்- எனவும், இயம் கொட்டினார்- ஊதினார் எனவும், படை எறிந்தார்- எய்தார்- எனவும், சோறும் கறியும் தின்றார் எனவும், யாழும் குழலும் ஊதினார் எனவும் | |
ஒன்றற்கு உரிய வினையான் கூறின் மரபு வழுவாம் என்பது அஃதேல், |
| ‘ஊன்துவை கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது’ | புறம்.14 |
|
| ‘உண்டற்கு உரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே’ | தொல்.பொருள்.213 |
என்னும் பொருளியல் சூத்திரத்தானும் உண்டல் தொழில் பொதுவினையும் ஆதல் உணர்க. கறி ஒழித்து ஏனையவற்றிற்கு எல்லாம் உண்டல் தொழில் உரித்து ஆகலின் பன்மை பற்றிக் கூறினார் எனினும் அமையும். |