‘அடிசில் தின்று’ என்று செய்யுட்கண் வருவது, உண்பான் மனிதப்பண்பு இல்லனாய் உடல் ஒன்றனையுமே ஓம்புவானாய் இருத்தல் பற்றி அவனை இழித்துக்கூறற்கண் வந்தது. மிசைதல்- அயிறல்- என்பன சிறப்புவினை என்பது நச்சினார்க்கினியர் கருத்து. |
| ‘கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய அறுவர் மற்றையோர் அந்நிலை அயின்றனர்’ | பரிபா. 5-44-45 |
என்ற இடத்து அயிலுதல் விழுங்குதலையும், |
| ‘மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும்பிடி’ நளிபுகை கமழாது இறாயினிர் மிசைந்து’
‘இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த’ | கலி.50-2 மலைபடு.249
அகநா.29 |
என்புழி மிசைதல் என்பது தின்றலையும் குறித்தலின் அயிலுதல், மிசைதல் என்பன சிறப்பு வினையேயாம். இவ்வாறு உரைத்தார் நச்சினார்க்கினியர். இந்நூற்பா உரை பெரும்பாலும் நச்சினார்க்கினியர் தொல்.சொல். 46ஆம் நூற்பா உரையில் சொற்றனவே. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்.’
‘எண்ணுங் காலும் அதுஅதன் மரபே.’ ‘பொதுத் தொழிலை ஒன்றால் புகலார்.’ முழுதும் ‘வேறு வினைப்பல் பொருட்குப் பொதுப்பெயர் பொதுவினை கொடுத்துப் புகல்வது நெறியே.’
‘எண்ணுழி யும்பொது வினையான் இயலும்.’ | தொல்.சொல்.46
47 நே.வி.13 நன்.389
மு.வீ.ஒ.78
79 |