சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-27593

முகிழ்நகை முகத்தால் தணிக்கும் புதல்வன் மேல் ஒரு காலைக்கு ஒருகால் பெருகும்
அன்பு காரணம் என்பதூஉம் பெறப்படுமாதலின் வழு ஆகாது என்க.

மீக்கூற்றம் என்புழிப்போலக் கூற்றுக் ‘கூற்றம்’ என நின்றது. 27
 

விளக்கம்
 

நூற்பா தொல்காப்பிய நூற்பா. உரை சேனாவரையர் உரை.

அசோகந்தளிரின் இயற்கைச் செந்நிறம் நிறந்தீட்ட வல்லான் ஒருவன்
செயற்கையாக நிறம் ஊட்டியதுபோலக் காணப்படுகிறது என்பதும், கீழே கிடக்கும் பாறை
ஒருவர் செயற்கையாகக் கீழே கிடத்திவைத்தாற்போலக் காணப்படுகிறது என்றும்,
மலையின்மேல் ஏறும் வழியை உடையபாறை நேரே செங்குத்தாக நட்டு வைத்தாற்போல
உள்ளது என்றும் கூறுவன உவம அலங்காரம் அன்று, வேறோர் அலங்காரம் என்பார்
சேனாவரையர்; வேறுபடவந்த உவமத்தோற்’ றத்துள் அடக்கினார் நச்சினார்க்கினியர்.
 

  ‘குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றும்
சிறப்புடை மரபின் உதாரம்’

 

என்ற பொது அணியை உட்கொண்டு ‘ஒல்லேம்..........நறிது’ என்புழி, அக்கூற்று நிகழ்ந்த
இடம் நோக்கிக் காரணம் பெறப்படும் என்று சேனாவரையர் விளக்கி உரைத்ததனையே
இவ்வாசிரியரும் குறிப்பிட்டார்.

தலைவி புதல்வற் பயந்த முதியவள் ஆயினமையே தலைவன்
புறத்தொழுக்கத்திற்குக் காரணம் என்பதும், புறத்தொழுக்கத்தில் பலர் தொடர்பும்
கொண்டான் என்ற வெறுப்பினால் அவன் மார்பின் மாலைக்கண் புலால் நாறு