சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

60 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இவை தமிழ்ஒழி பதினேழ்நிலச் சொற்களுள் பண்டை உரையாசிரியரால்
அறிவிக்கப்பட்டவை. இவற்றைப்பண்டை உரையாசிரியர்கள் கூறியவாறே இவரும்
கொண்டார். இவையும் இருவகை வழக்கினுள் வருமாறு காண்க.

 

சூறாவளி
 

தமிழ்ஒழி பதினேழ் நிலத்து மொழிகளையும் கொடுந் தமிழ்நாட்டு மொழியோடு
ஒப்பத் திசைச்சொல் எனக் கொண்டார். ஆசிரியர் தொல்காப்பியனார் அவ்வாறு
கொள்ளாமையானும், உரையாசிரியர் சேனாவரையர் கூறாமையானும், வடசொல் போல
ஏனை நிலத்துச்சொற்கள் சான்றோர் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வாராமையானும்
சில சொற்கள் இக்காலத்து வரினும் இலக்கணமுறை அன்மையானும் அவை தமிழ்க்குரிய
திசைச்சொல் ஆக என மறுக்க.
 

அமைதி
 

நச்சினார்க்கினியரும் தெய்வச்சிலையாரும் தமிழ்ஒழி பன்னிருநிலம் கொண்டனர்.
நன்னூலார் தமிழ்ஒழிபதினேழ் நிலம் கொண்டார். அவ்வந்நிலச் சொற்களும்
அருகித்தமிழில் வழங்குதலின் அவற்றையும் கோடல் வேண்டும் என்பது
நச்சினார்க்கினியர் முதலியோர் காட்டிய எடுத்துக்காட்டுக்களான் வலியுறும். இதுபற்றி
முனிவர் நன்னூல் விருத்தியுள் எதுவும் கூறாதது விந்தையே.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

 ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.’

முழுதும்
‘கொங்கணம் மகதம் கோசலம் துளுவம்
சிங்களம் சீனம் சிந்து திராவிடம்

தொல்.சொல். 400

நன்னூல்-27