சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-16-1761

  
 
வங்கம் சாவகம் மராடம் கலிங்கம்
அங்கம் சோனகம் அருணம் கவுசலம்
பப்பரம் காம்போசம் பாடைமூ வாறனுள்
மருவூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும்
மருதையாற்றின் தெற்கும் வையையாற்றின் வடக்கும்
செந்தமிழ் நிலனே பாண்டிகுட்டம் பன்றிகற்கா
வெண்குடம் பூழி மலாடு சீதம்
புனல்நாடு அருவா அருவா வடதலை
எனச்செந் தமிழ்சூழ் பன்னிரு நாடே.’

‘செந்தமிழ் நிலனைச் சேர்ந்தஈ ராறு
நிலத்தினும் தங்குறிப் பினதிசைக் கிளவி.’








தொ.வி.193


மு.வீ.ஒ. 52
 

வடசொல்
 

175
 
பொதுஎழுத் தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைவன வடசொல்.
 
 

இது மேல் வடசொல் என்றதன் இலக்கணம் கூறுகின்றது.

இ-ள்: தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவாகிய எழுத்தானும் ஆரியத்திற்கே
உரித்தாகிய எழுத்தானும் அவ்விரண்டனானும் ஆக்கப்பட்டு, ஈண்டைக்கு ஏற்ற
பெற்றியாய்த் திரிந்து பொருந்துவன வடசொல்லாம் என்றவாறு.

பொது எழுத்தாவன அச்சு என்று வழங்கும் உயிர் பதினானுள் இடையில் நான்கும்
ஈற்றில் இரண்டும் ஒழித்து ஒழிந்த பத்தும். அல் என்று வழங்கும் மெய் முப்பத்தேழனுள்
கசடதப என்னும் ஐந்து வருக்கங்களின் இடைக்கண் உரப்பியும் எடுத்தும் கனைத்தும்
சொல்லப்படும் பதினைந்தும் ஒழித்து ஒழிந்த அவ்வருக்கங்களின் முதலினும்
ஈற்றினும்நின்ற பத்தும் யரலவள என்னும் ஐந்தும் ஆகிய இருபத்தைந்தும் ஆம்.
சிறப்பெழுத்து ஆவன உயிருள் ஒழிந்த ஆறும். ஐ வருக்கங்