சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

600 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

செந்தாமரை முதலிய பிறிதின் இயைபு நீக்கிய விசேடமும், வெண்குடைப்
பெருவிறல் முதலிய தன்னொடு இயைபின்மை நீக்கிய விசேடமும் என்ற இருவகை
விசேடமும் விளக்கப்பட்டுள்ளன.

தன்னொடு இயைபின்மை நீக்கிய விசேடத்தில் வெண்குடை வழுதி, செஞ்ஞாயிறு
என்றாற் போன்ற இருவகைகள் இருப்பதும் அறிக. நூற்பா தொல்காப்பிய நூற்பா.
உரையின் பெரும் பகுதி சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரைத்தனவே.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  
 

‘ஒருபேர்ப் பொதுச்சொல்
பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு.’

 

நே.சொல்.8
  
 

‘அஃறிணை உயர்திணை ஆயிரு மருங்கினும்
ஒருபொரு ளாப்பலப் பெயர்க்குப் பொதுமொழி
பொதுமைவேறு இயம்பல் புலவோர் தொழிலே.’

 

மு.வீ.ஒ.81

இருதிணை இருபாற் பொதுப்பெயர் மரபு
 

324
 
பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.
 

 

இஃது இருதிணை இருபாற்கும் பொது ஆகிய பெயர்க்கண்ணது ஒரு மரபு   
வழுக் காக்கின்றது.

     இ-ள்: உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரினானும்
வினையினானும் பொதுமையின் பிரிந்து ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியவாய்
வருவன எல்லாம் வழு ஆகா, வழக்கின்கண் அடிப்பட்டன ஆகலான் என்றவாறு.

உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் என்பது அதிகாரத்தான் வந்தது.