சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-31,32605

இவ்வியல் இறுதிகாறும் தொல்காப்பிய எச்சவியற் செய்திகுறிக்கப்படும்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும் தொல்.சொல்.48
நன்.396
மு.வீ.ஒ.80
 

செய்யுளுள் விகுதி ஆகாரம் ஓகாரமாதல்
 

326 பெயர்வினை இடத்து னளரய ஈற்றுஅயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே.
 

 

இத்துணையும் வழுவற்க எனவும் வழீஇ அமைக்க எனவும் காத்து வழுக்களைந்து
சொற்களை அமைத்துக்கொண்டு, இனி முற்கூறிய நால்வகை ஓத்தினுள்ளும் கூறுதற்கு
இடம் இன்றி எஞ்சி நின்றன கூறுவான் புகுந்தன வற்றுள் இதுசெய்யுள்இடத்துப்
பெயர்வினை பற்றி நிகழ்வது ஓர் ஒழிபுகூறுகின்றது.

இ-ள்: பெயர்வினைகளின் ஈற்றில் நின்ற னகர ளகர ரகரயகரங்களின் அயல்
ஆகாரம் ஓகாரம் ஆகவும் பெறும்செய்யுட்கண் என்றவாறு.
 

  எ-டு:
‘வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அனியர் தாமே.................... ......................
வேய்பயில் அழுவம் முன்னி யோரே’
குறுந்.7
 
‘கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே’
 
நற்.70
 
எனவும்,
  ‘வினவி நிற்றந் தோனே’ அகம்.48