சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

606 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘நல்லை மன்என நகூஉப்பெயர்ந் தோளே’
 
அகம்.248
  ‘வாடா வள்ளியங் காடிறந் தோரே’
 
குறுந்.216
  ‘வந்தோய் மன்ற தெண்கடல் சேர்ப்ப’
  

அகம்.80
எனவும்,
ஆகாரம் ஓகாரம் ஆயவாறு காண்க.
                    ஏற்புழிக் கோடலான், சேரமான் மலையமான் உண்ணான் உறங்கான் என்னும்
தொடக்கத்தன திரியா எனவும், ஆய் ஈறு திரிதல் பெரும்பான்மையும் உயர்திணைக்கண்
வந்தவழி எனவும் கொள்க.
 
  இனி ஒன்றுஎனமுடித்தலான்
‘பழமுதிர் சோலை மலைகிழ வோனே’
 
முருகு.317
என அகரம் திரிதலும் கொள்க. பிறவும் வந்துழிக் காண்க
 

விளக்கம்
 

32ஆம் நூற்பா முதல் இவ்வியல் முடிவுகாறும்கூறப்படுவன தொல்காப்பிய
எச்சவியல் முதலியவற்றின்செய்திகளாம்.

ஆகாரம் ஓகாரமாவன ஆன், ஆள், ஆர் என்றபடர்க்கை விகுதி பெற்ற பெயர்
வினைகளும் ஆய் என்றமுன்னிலை விகுதி பெற்ற பெயர் வினைகளுமாம். இவற்றுள்
பெயர் பற்றியனவற்றைப் பெயரியலுள்ளும், வினைபற்றியவற்றைவினையியலுள்ளும்
தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். இவர்அவற்றை நன்னூலார் போலப் பெயர்
வினை இரண்டற்கும்பொதுவான பொதுவியலுள் குறிப்பிடுகின்றார்.

வில்லான். தொடியாள், நல்லார், முன்னியார் செப்பாதாய்என்ற பெயர்களின்
ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆயினவாறு.