சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

608 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆஓவாம் செய்யுளிடை.’
 
நே.சொல்.38
  ‘அன்றி ஆ ஓஆகி ஆய்ஓய் நின்றனவும்
எய்தும் கடப்பாட்டின்.’
 
நே.சொல்.49
 
  முழுதும் நன்.353
  ‘யாப்பினுள் ஆஓஆகலும் உளவே.’
மு.வீ.பெ.47
 
  ‘ஆன்ஆள் ஆர்முதல் ஆஓ ஆகும்.’
 
மு.வீ.வி.13
 
  ‘ஆய்என கிளவியும் அவற்றோ ரற்றே.’
 
வீ.14
 
 

எதிர் மறுப்பினும் உருபு முதலியவை
பொருள்நிலை திரியாமை
 


 
327 எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா
உருபும் பெயர்வினை எச்சமும் என்ப.

 

இது வேற்றுமைச் சொற்கண்ணும் பெயரெச்சவினையெச்ச வினைச் சொற்கண்ணும்
முறையே வழுஅமைத்தலும் எய்தாதது எய்துவித்தலும் பற்றி நிகழ்வோர்ஒழிபு
கூறுகின்றது.

இ-ள் விதிமுகத்தான் கூறாது எதிர் மறுத்துக் கூறினும்பொருள் நிலை திரியாவாம்,
வேற்றுமைச் சொல்லும் பெயரெச்சவினைச்சொல்லும் வினையெச்ச வினைச்சொல்லும்
என்றுகூறுவர் ஆசிரியர் என்றவாறு.

எ-டு: மரத்தைக் குறையான்- வேலான் எறியான்-எனவும்,

ஓதாப்பார்ப்பான்- வளையாக்கோல்- உண்ணா இல்லம்-உண்ணா ஊண்-
உண்ணாக்காலம்- உண்ணாச்சோறு- எனவும்,

உண்ணாது வந்தான்- உண்ணாமைக்குப் போயினான்-எனவும் வரும்.