இந்நூற்பாவில் வினையெச்சமும் பெயரெச்சமும்கூறப்பட்டிருப்பவும் வினைமுற்று கூறப்படாமைக்கு உரியகாரணத்தைச் சேனாவரையர் தொல். சொல்.236இல் குறிப்பிட்ட செய்திகளைக் குறிப்பிட்டே விளக்கியுள்ளார்இவ்வாசிரியர். வினைபெயரெச்சங்களும் விதிவினையாய்அமைந்த வாய்பாடுகளான் விளக்கப்பட்டன படவே அவைமறைக் கண்ணும் வரும் என்பது கூறவேண்டுவது ஆயிற்று.ஆனால் வினைமுற்றுக்கள் விதிவினை மறைவினை என்றஇரண்டற்கும் பொதுவாகிய ஈறுபற்றி ஓதப்பட்டன. ஆன்ஈறுஉண்டான் என்ற விதிவினைக்கும் உண்ணான் என்ற மறைவினைக்கும் பொது. பிறவும் அன்ன. ஆகவே,எதிர்மறுத்துரைத்தல் பெயரெச்ச வினையெச்சங்களுக்கேகூறப்பட்டது என்பது. “உண்ணாது வந்தான், உண்டு வாரான் என எச்சமும் முடிக்கும் சொல்லும் எதிர் மறுத்தன. |