சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

620 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘அரியானை அந்தணர்தம் சிந்தையானை’ திருமுறை-1
  ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று’ குறள்.1101

    இவை ஒன்று பல அடுக்கல்;
    வாளான் மருவாரை வழிக்கண் வெட்டினான்.
இது வேறு பல அடுக்கல்;
 
‘புரைதீரா மன்னா இளமை’-
‘ஏவவும் செய்கலான் தான் தேறான்’
குறள்.848
 
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’
 
குறள்.448

இவை மறையாய் அடுக்கல்;
    சாத்தனைக் கண்டு கொற்றனைக் காணாது வந்தான்,
    சோறு உண்டு கை கழுவாது வந்தான். -

இவை விரவி அடுக்கல்-
முதலிய எடுத்துக் காட்டுக்களும் இலக்கணக்கொத்துநூலார் தந்துள்ளார்.(120)


ஒத்த நூற்பாக்கள்

 

  ‘ஏனைத்துமுற்று அடுக்கினும் அனைத்துமொருபேர்மேல்
நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே
‘வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படிய.’ அகத்தியம்.

‘உருபுதொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கே.’
 
தொல்.சொல். 102
  ‘அவைதாம்
தத்தம் கிளவி அடுக்குந வரினும்
எத்திறத் தானும் பெயர்முடி பினவே.’
 
429
 
  ‘பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொல்முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.’
233