சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-34,35621

  ‘வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படிய.’
 
நே.சொல்.46.மேற்
  ‘சாற்றும் பெயர்வினை எச்சங்கள் தாம்அடுக்கித்
தோற்றல்.......மெய்ந்நூல் நெறி.’
நே.சொல்.46
  ‘உருபுபல அடுக்கினும் வினைவேறு அடுக்கினும்
ஒருதம் எச்சம் ஈறுற முடியும்.’
நன்.355
  ‘பெயர்முற்று எச்சமோடு உருபுஐந் தடுக்கே
இரட்டைக் கிளவியோடு இருமூன்று அவைதாம்
ஒன்றுபல அடுக்கல் வேறுபல அடுக்கல்
விதியாய் அடுக்கல் மறையாய் அடுக்கல்
விதிமறை கூடி விரவி அடுக்கல்........
 
இ.கொ.120
 

இடைப்பிறவரல்
 

329 உருபு முற்றுஈ ரெச்சம் கொள்ளும்
பெயர்வினை இடைப்பிற வரலுமாம் ஏற்பன.
 

 

இது முடிவனவற்றை முடிப்பன முடிப்புழி வழுவமைதிநிகழ்வதோர் ஒழிபு
கூறுகின்றது; என்னை? ஒட்டி நிற்றற்குஉரிய அவ்விரண்டற்கும் இடையே பிறசொல்
வருதல் வழுஆயினும் முடிக்கும் சொல்லொடு இயைபு உடையன வரின்அமையும்
என்றலின்.

இ-ள்: உருபு ஏற்ற சொற்களும் முற்றுவினைச்சொற்களும் பெயரெச்ச வினைஎச்சச்
சொற்களும் தாம்தாம் கொண்டு முடியும் பெயர்ச் சொற்கும் வினைச்சொற்கும்
இடையே பிற சொற்கள் வருதலும் பொருந்தும், பொருந்துவனவரின் என்றவாறு.
 

     எ-டு:

சாத்தன் உண்டு வந்தான்
                    அறத்தை அரசன் விரும்பினான்