சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

622 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்







எனவும்,
வாளான் மருவாரை மாய வெட்டினான்-
தேவர்க்குச் செல்வம் வேண்டிச் சிறப்பு எடுத்தான்-
மலையினின்று உருண்டு வீழ்ந்தான்-
சாத்தனது இத்தடக்கை யானை-
ஊர்க்கண் உயர்ந்த ஒளி மாடம்-
சாத்தா! கூத்தர்க்குக் கூறை கொடு-

 
  உண்டான் வந்த சாத்தன்-
‘பாடினான் தேவ கீதம் பண்ணினுக்கு அரசன்’
 
சீவக.2052
 
  ‘அழுதாள் தடமாக அணங்கிழையே’ சீவக.1523
எனவும்,
 
  செவ்வியன் சான்றோன் மகன்,
 
எனவும்,
 
  கொன்ற காட்டுள்யானை,
கொல்கின்ற காட்டுள்யானை,
கொல்லும் காட்டுள்யானை,
கவளங் கொள்ளாச் சுளித்த யானை

 
எனவும்,
 
  உழுது சாத்தன் வந்தான்,
உழுது ஏரொடு வந்தான்,
உழுது ஓடிவந்தான்
எனவும் வரும். பிறவும் அன்ன.
 

 

ஏற்பன வரும் எனவே, ஏலாதன வரப்பெறா என்பதாம். ஏலாதன ஆவன
ஒருதலையாக எச்சத்தொடு இயைந்து நில்லாது நின்ற சொல்லொடும் தாமே இயைந்து
பொருள்படுப்பன என்க.

     உண்டு விருந்தொடு வந்தான்.
    வல்லம் எறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல்
    யானைப் பெருவழுதி.

என்றவழி, விருந்தொடு உண்டு என வினையெச்சத்தொடும் இயைதலின் பொருள்
கவர்க்கும். வல்லம் எறிதல் நல்லிளங்கோசர்க்கும்