சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-37629

எனவே, ஏனைய இறுதிக்கண் தொகாது இடைக்கண் தொகும் என்பதூஉம், ஐயும்
கண்ணும் ஈரிடத்தும் தொகும் என்பதூஉம் பெற்றாம். இடைக்கண் தொகும் இயல்பு
மேற்கூறுப.

அற்றேல், இவற்றினையும் அவற்றைச் சாரக் கூறாது ஈண்டுக் கூறியது என்னை
எனின், கடந்தான் நிலம்- இருந்தான் குன்றத்து- என்பன ஒருங்கு இசைத்து உருபு
ஏற்றலும் பயனிலை கோடலும் எய்துமாறு இலவாய்ப் பக்கிசைத் தலின், அவற்றின் வேறு
என்பது உணர்த்துதற்கு ஈண்டுக் கூறினார் என்க.

தாய் மூவர்- அறங்கறக்கும்- வரைபாய்தல்- சாத்தன் புத்தகம்- என இடைக்கண்
தொக்குநின்ற மூன்றாவது முதலிய நான்கும் முறையே மூவர் தாய்- கறக்கும் அறம்-
பாய்தல்வரை- புத்தகஞ்சாத்தன்- என இறுதிக்கண் தொகாமையும், கடந்தான் நிலம்-
இருந்தான் குன்றத்து- என முறையே ஐயும் கண்ணும் இறுதிக்கண் தொக்கமையும்
காண்க. பிறவும் அன்ன.37
 

விளக்கம்
 

வேற்றுமை உருபுதொக முடிக்கப்படும் சொல்லும் முடிக்கும் சொல்லும் புணரும்
பொருட் புணர்ச்சிக்கண், முடிக்குஞ் சொல் முன்னரும் முடிக்கப்படுஞ் சொல் ஈற்றிலும்
அமையும் நிலை இரண்டாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கும் ஏழாம் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கும் வழுவமைதி; அல்லவனவற்றிற்கு வழுவே என்பது.

வேற்றுமை உருபு இடையே தொகப் பொருள் மாறாது சொற்கள் ஒட்டி ஒருசொல்
நீர்மைப்படும் செய்தி ‘வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல’ (336) என்புழிக்
கூறப்படும். ஆண்டு நிலைமொழி பெயராகவும் வருமொழி பெயராகவும் வினையாகவும்
சாத்தன் கை, நிலங்கடந்தான் என்றாற் போலப் பிளவுபட்டிசையாது ஒன்றுபட்டிசைக்கும்.