சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

630 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கடந்தான் நிலம்-இருந்தான் குன்றத்து- என்புழி உருபு தொக்குநின்றதேனும்,
இரண்டு சொற்களும் ஒன்றுபட்டிசையாது பக்கிசைத்தலின், வினையொடு பெயர் கூடிய
வழித் தொகை ஆகாது என்ற சேனாவரையர் கருத்தை (தொல்.சொல்.420)
உட்கொண்டவர் இவ்வாசிரியர். ஏனைய உருபுகள் இறுதிக்கண் தொகின் பொருள்
மாறுபடுதல் விளக்கப்பட்டது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

முழுதும் தொல்.சொல். 105

 

‘இருசொல் இறுதி இரண்டேழ் அலாத
உருபுதொகா தென்றுரைப்ப.......’-
 
நே.சொல்.22,
 

ஒருபாற்சொல் ஏனைப்பாற்கும் வரும்
வழுவமைதி
 

332 ஒருபாற் கிளவி ஏனைப்பால் கண்ணும்
வருவன தாமே வழக்குஎன மொழிப.

 

இது பால் வகையான் உளது ஆகிய வழுவமைதி பற்றி நிகழ்வதோர் ஒழிபு
கூறுகின்றது.

இ-ள்: ஒருபாற்கு உரிய சொல்மேல் வைத்துக் கூறிய சொல் ஒழிந்த பாற்கண்ணும்
வருதல் நெறி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

வரலாறு: நஞ்சு உண்டான் சாம் என்பது ஒருபாற்கு உரிய சொல் ஆயினும், நஞ்சு
உண்டாள் சாம்- நஞ்சு உண்டார் சாவர்- நஞ்சுஉண்டது சாம்- நஞ்சு உண்டனசாம்- என
ஏனைப்பால் கண்ணும் உரித்தாய் வந்தவாறு காண்க.

பார்ப்பான் கள் உண்ணான் என்றவழிக் கள் உண்ணாமை சாதி பற்றிச் செல்வது
ஒன்று ஆகலின் பார்ப்பனிக்கும் பார்ப்பார்க்கும் அல்லது பிற சாதியார்க்கும்
அஃறிணைக்கும்