ஒருபாற் சொல்லிற்குக் கூறிய செய்தி சொல்லாற்றலால் அப்பால் ஒன்றனையே உணர்த்தாது, பொருள் ஆற்றலின் ஏனைப் பால்கள்மேலும் சேர்தலின் வழுவமைதியாகுமாறு, நஞ்சுண்டான்சாம் என்ற தொடரில் சொல்லாற்றலால் பெறப்படுவது படர்க்கை ஆண்மகன் இறப்பான் என்பது; பொருளாற்றலால் பெறப்படுவது ஆகியசாதற்கு நஞ்சு காரணம் என்பது ஒரு பால்மேல் வைத்துக்கூறப்படினும் ஏனைப்பாற்கும் செல்லும் என்பது. இச் செய்திகள் இந்நூற்பாவாலேயே கொள்ளப்படல் வேண்டும் என்று கூறிச் சேனாவரையர் தொல்.சொல்.161 |