இது பொதுவாகிய பெயர் வினைகளைப் பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: திணைபால் இடங்களுக்குப் பொதுவாய் நின்ற பெயர்வினைகளுடைய பொதுமையை நீக்கி ஒன்றற்கு உரியவாக்கும், தத்தம் மரபினான் அவற்றின் மேல் வரும் படர்க்கைப் பெயரும் படர்க்கை முற்றுவினையும் சொல்லொடு கூடிய குறிப்பும் என்றவாறு. எ-டு: சாத்தன் ஒருவன் சாத்தன் ஒன்று எனவும், சாத்தன் வந்தான் வந்தது எனவும் பொதுப்பெயரின் பொது |