சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-39633

மையைத் தத்தம் மரபினான் மேல் வரும் சிறப்புப் பெயர் வினைகள் நீக்கியவாறு காண்க.

முடவன்- முடக்கொற்றன்- தந்தை- முதலிய பிறவும் அன்ன.

ஆஒன்று, ஆபல- ஆவந்தது, ஆவந்தன- எனவும் பால்பகா அஃறிணைப்பெயரின்
பொதுமையைத் தத்தம் மரபின் மேல் வரும் சிறப்புப் பெயர் வினைகள் நீக்கியவாறு
காண்க.

வாழ்க மன்னவன்- வேறு அவன்- உண்டுசாதல்- இல்லை அவன்- காணும் அவன்-
உண்டசாத்தன்- உண்டுவந்தான்- அப்பொது வினைகளின் பொதுமையைத் தத்தம்
மரபினான் மேல்வரும் சிறப்புப் பெயர் வினைகள் நீக்கியவாறு காண்க. பிறவும் அன்ன.

யான் வருதலான் ஆசாரம் பெற்றாய்- யான் பற்றலான் உடம்பு நுணுகிற்று- எனவும்,

நீவருதலான் ஆசாரம் பெற்றேன்- நீவருதலான் முல்லை அரும்பின- எனவும்
சொல்லொடு கூடிய குறிப்பு, பொதுமை நீக்கியவாறு காண்க.

ஒரு சாத்தன் ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானும்
தன்னுழைச் சென்றவழி, நீ வந்தாய்- நீயிர் வந்தீர்- என்னும் அன்றே? ஆண்டு அது
கேட்டான் இவன் இன்னபால் கருதிக் கூறினான் என்று உணர்தலும்,
 

  ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்துஒழுகல் ஆற்றின்’
 
நாலடி.309
 
என்றவழிச் சொல்லுவானொடு கேட்டான் இவன் ஆண் ஒருமை குறித்தான் என்று
உணர்தலும், பிறவும் இன்ன எனவே கொள்க.