தனிப்பட்ட முறையில் திணை துணியப்படாத சொற்கள் தம்மை முடித்தற்கு வரும் சிறப்புச் சொற்களால் திணை துணியப்படும். அங்ஙனமே பொதுவாகக் கூறின் பால் துணியப்படாப் பொதுச்சொற்கள், தம்மை முடித்தற்கு வரும் சிறப்புச் சொற்களான் பால் உணரப்படும் என்பது. சாத்தன் என்பது இருதிணைக்கும் பொதுப்பெயர். அது தன்னை முடித்தற்கு வரும் ஒருவன், வந்தான்- என்ற சிறப்புப் பெயர் வினைகளால் தான் உயர்திணை ஆகியவற்றை அறிவிக்கின்றது. ஆ-என்பது அஃறிணை இருபாற்கும் பொதுவான சொல், அஃது ஒன்று, வந்தது என்ற சிறப்புப் பெயர் வினைகளால் தான் ஒருமை ஆகியவாற்றை அறிவிக்கிறது. |