சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-39635

வாழ்க முதலிய வியங்கோள் வினைகளும், வேறு இல்லை உண்டு என்ற குறிப்பு
வினைமுற்றுக்களும், பெயரெச்சவினையெச்சங்களும் இருதிணை ஐம்பால்
மூவிடங்களுக்கும் பொதுவான வினைகளாம். அவை,
 

  வாழ்க மன்னவன்- வியங்கோள்- ஆண்பால்.
வேறு அவன்- வேறு- ஆண்பால்
உண்டு சாதல்- உண்டு- ஒன்றன்பால்
இல்லை அவன்- இல்லை- ஆண்பால்
காணும் அவன்- பெயரெச்சம்- ஆண்பால்
உண்ட சாத்தன்- பெயரெச்சம்- ஆண்பால்
உண்டு வந்தான்- வினையெச்சம்- ஆண்பால்
 

 
எனச் சிறப்பான முடிக்குஞ் சொற்களான் பொதுமை நீங்கிச் சிறப்பு வகையில்
திணைபால்கட்கு உரிமை பெற்றவாறு.
 
  யான் என்பது இருதிணைப் பொதுப்பெயர்.
 

 
யான....பெற்றாய்’ என்புழி, யான் உயர்திணை ஆண்பால்; யான் பற்றலான் உடம்பு
நுணுகிற்று’ என்புழி, யான் என்பது வாடைக்காற்றாகிய அஃறிணை ஒன்றன்பால்; ‘நீ
வருதலான் ஆசாரம் பெற்றேன்’ என்புழி நீ- உயர்திணை ஆண்பால்; ‘நீ வருதலான்
முல்லை அரும்பின’ என்புழி நீ- கார் காலத்தைக் குறித்தலின் ஒன்றன்பால்.
 

இவை குறிப்பான் உணர்த்தின.
                    நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்பன சொல்லுவான் குறிப்பினாலேயே திணை
உணர்த்தும்.
 

 
‘ஒருவர் ஒருவரைச் சார்ந்துஒழுக லாற்றின்’
 
நாலடி.309
 
என்புழி, ஒருவர் என்ற ஆண்மை பெண்மைப் பொதுச்சொல் ஆண்பாலைக் குறிப்பான்
உணர்த்திற்று. இதனைச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் முதலாயினாரும்
குறிப்பிட்டனர்.