சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

64 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

அவை பாகத்தில் நட்டம் எனவும் கண்ணன் எனவும் உள்ளன. அங்கிருந்து இவை
தமிழில் கொள்ளப்பட்டன என்று பண்டைத்தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூற்றை
உட்கொண்டு இவரும் சொற்றார்.

இனி, ஆரியச்சொல் வடசொல்லாய்த்திரிந்து வருதல் பற்றியும், அவற்றின்
புணர்நிலைபற்றியும் இலக்கண் நூலார் கூறுவனவற்றைச் சுருங்கக்காண்போம்.

நன்னூலார் பதவியலில் வடமொழியாக்கம் என்ற ஒரு பகுதியை அமைத்துள்ளார்.
அதன்கண்,
 

  
 
‘இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சுஐ வருக்க முதல்ஈறு
ய-ஆதி நான்மையும் ள-ஆகும் ஐ ஐம்
பொதுஎழுத்து ஒழிந்த நாலேழும் திரியும்.’
எனவும்,

ஏழாம்உயிர் இய்யும் இரூவும் ஐ வருக்கத்து
இடையின் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேலொன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே அகவும் ஐந்துஇரு கவ்வும்
ஆஈறு ஐயும் ஈஈறு இகரமும்.’
எனவும்,

‘ரவ்விற்கு அம்முத லாமுக் குறிலும்
லவ்விற்கு இ முதல் இரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுதல் ஆகிமுன் வருமே.’
எனவும்,

‘இணைந்துஇயல் காலை யரலக்கு இகரமும்
மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும்
மிசைவரும் ர-வழி உவ்வும் ஆம்பிற.’



நன். 165







146




147




148
எனவும் குறிப்பிட்டார்.