சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-40641

மயங்கியலினும், மெய்யீற்று வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மையும்
மெய்ம்மயங்கியலினும், நிலைமொழி ஈறாக வைத்துக் கெடுத்துப் பின் வருமொழியொடு
புணர்த்தாமையின் அவ்வாறு உரைத்தல் மலையிடறு என்க.

வடநூலாரும் அச்சுச் சந்தியினும் அல்லுச்சந்தியினும் அவ்வாறு உருபுகளையும்
உம்மையையும் உவமையையும் வைத்துப் புணர்த்தார். இஃதன்றியும், தவளைவாய்-
குவளைமலர்- அம்பிகாபதி- என்பனவற்றை ஆறாம்வேற்றுமை நிலைமொழி ஈறாக நின்று
கெட்ட சந்தி என்றால் இயல்பு சந்தி ஆகாமையானும்,
 

  ‘கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’
‘பெயலும் விளையுளும் தொக்கு’
‘மருவின் தொகுதி மயங்கியல் மொழி’
‘மக்கட் பெயர்த் தொகுதி’
‘அன்ன மரபின் இரண்டொடும் தொகை இ’
 
குறள்.377
குறள்.545
தொல்.111


தொல்.சொல்.112
என்புழிக் கோடி முதலிய சொற்கள் எல்லாம் ஈறுகெட்டுத் தொகுவன அன்மையானும்,
உவாஅப்பதினான்கு- பொற்குடி- என்னும் உம்மைத்தொகையும் அன்மொழித்தொகையும்
வருமொழி ஈற்றில் உம்மையும் உடையாள் என்னும் சொல்லும் கெட்ட எனவும்
வேண்டுமாகலானும் வேற்றுமை உருபு முதலிய சொற்கள் தொகுதல் மலை இடறு என்க.
பாணினி பகவான் ஆறாம் அத்தியாயத்துள் விபத்தி இல்லாமல் பதத்தொடு பதம்
புணரும் சந்தி கூறுவர்; ‘உருபு தொகவருதல்’ தொல்.சொல்.104 என்றாற்போல இரண்டாம்
அத்தியாயத்துள் சமாசனில் விபத்தியும் விதித்து லாபமும் விதித்தார். சேனாவரையர்
காத்தியாயனர் உரைத்தாங்கு உரைத்தார்.” பி.வி.19 உரை.