சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-42651

  ‘எழுவாய் முதல்எழு வேற்றுமை யோடும் எழுந்தடையில்
வழுவாத நஞ்ஞெரடுஎட் டாம்தற் புருடன்.’

‘இரண்டு........தொகையே.’

‘தற்புரு டத்தொகை வேற்றுமை எட்டனுள் சார்ந்தநஞ்ஞுச்
சொற்பொருள் அன்மை மறைஇன்மை காட்டும்.’

‘தொகுபெயர் வேற்றுமைத் தொடர்பெயர் அன்ன
இயல்திரிபு அழிவுஆக்கம் ஐந்தாம் தொகையே.’

 


வீ.சோ.46
நன்.363, மு.வீ.ஓ.95


பி.வி.21


தொ.வி.91
[மணி கொடுத்தான்- கற்கடாயினான்- திண்கொண்ட தோள்- பலாக்குறைத்தான்.]
 

உவமத்தொகை
 

337 உவமத் தொகையே உவம இயல.
 

 

இஃது உவமத் தொகை ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: உவம உருபுகள் தொக அவற்றின் பொருள் தொக்க தொகைச்சொற்கள்
அவ்வுருபுகள் தொக்கன எனும் தொகாது நின்று அவ்வுவம உருபுதொடர் பொருள்
உணர்த்தியாங்கு உணர்த்தும் இயல்பினை உடையவாம் என்றவாறு.

எனவே, புலி அன்ன சாத்தன்- மயில் அன்ன மாதர்- என உவம
உருபுதொடர்ப்பொருள் உணர்த்தும் ஆற்றல் இல்லன தொகா; அவ்வாற்றல் உடையனவே
தொகுவன என்றவாறு ஆயிற்று.

வரலாறு: புலிப்பாய்த்துள்- மழைவண்கை- துடிநடுவு- பொன்மேனி- எனவரும்.