சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-43653

  ‘உவமப் பொருளின் உற்றது உணரும்.’
‘சுட்டிக் கூறா உவமம் ஆயின்’
‘உவமப் போலி ஐந்தென மொழிப’
‘வேறுபட வந்த உவமத் தோற்றம்’
‘வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே’
 
295
282
299
307

தொ.சொல்.412
 
என யாண்டும் தொல்காப்பியனார் உவமம் என்ற சொல்லாலேயே குறிப்பிட்டிருத்தல்
உளங்கொளத்தக்கது.

இந்நூற்பாச் செய்திகள் யாவும் சேனாவரையர் குறிப்பிட்டனவேயாம். உவமைத்
தொகைகள் யாவும் இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன்தொக்க
தொகையாகவும் அடங்கும் என்பதும். வடநூலார் உவமத்தொகை என்று ஒரு தொகை
குறிப்பிடாமையும் உணரத்தக்கன.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘உவமை விரியின் உவமைத் தொகையாம்’

‘உவம உருபிலது உவமைத் தொகையே.’

‘போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே.’
தொல்.சொல்.414

நே.சொல்.62

நன்.366, மு.வீ.ஒ.98



நன்.367
 

வினைத்தொகை
 

338 வினையின் தொகுதி காலத்து இயலும்.
 

 

இது வினைத்தொகை ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: முதல்நிலைவினை பிறிது ஒரு சொல்லொடு தொக்க தொகை காலத்தின்கண்
நிகழும் என்றவாறு.