சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

654 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘காலத்து இயலும்’ எனப் பொது வகையான் கூறிய அதனான், மூன்று காலமும்
கொள்க. ‘தொகுதி காலத்து இயலும்’ எனவே, அவ்வினை பிரிந்து நின்றவழித் தோன்றாது
தொக்கவழித் தொகை ஆற்றலான் காலம் தோன்றும் என்றவாறு ஆயிற்று.

வரலாறு: கொல்யானை- அரிவாள்- ஆடுஅரங்கு- செல்செலவு- புணர்பொழுது-
செய்குன்று- எனவரும். காலம் உணர்த்தாது வினை மாத்திரம் உணர்த்தும் பெயர்,
செய்வது முதலாகிய பெயரோடு தொக்குழிக்காலம் உணர்த்தியவாறு கண்டு கொள்க.
காலம் உணர்த்துகின்றுழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்று உணர்த்தும் என்பது ஈண்டு
உரையிற் கொள்க.
 

  ‘செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய்ஒருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்’

 


தொல்.482
என்ப ஆதலின், தொகைப் பொருளாகிய தாம் பிரிந்தவழிப் பெறப்படாமையின்
இவற்றைப் பிரித்துப் புணராது.
 
  ‘போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல்’

(141)
 
என்பதனால் தழீஇயினார்.

பண்புத்தொகையும் பிரிவுஇல் ஒட்டு ஆகலின் அதற்கும் இவ்வுரை உய்த்து
உரைக்க. அதனான் இவை தம் சொல்லான் விரிக்கப்படாமையின் பிரிவில் ஒட்டாம்.
காலம் உணர்த்துகின்றுழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்று உணர்த்தும் எனவே,
பிறிதொரு சொல் என்றது ‘செய்வது ஆதி அறுபொருட் பெயரும்’ (340) என்பது
பெற்றாம் எனக் கொள்க.