சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-44655

இனி, இவ்வாறு அன்றிக் ‘காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’ (நன்.364)
என்று கூறுவாரும் உளராலோ எனின், அற்றன்று; கொன்றயானை என்னும் பெயரெச்சம்
காலம் கரந்து கொல்யானை என நின்றதேல், அங்ஙனம் தொக்கு நின்றவழியும் தனக்கு
உரிய இறந்த காலம் ஒன்றுமே உணர்த்திநிற்றல் வேண்டும்; அங்ஙனம் நில்லாது
முக்காலமும் ஒருங்கு உணர்த்தி நிற்றலானும், கொன்றயானை என விரிந்தவழித்
தொகைப் பொருளாகிய முக்காலமும் ஒருங்கு உணர்த்தும் தன்மை சிதைந்து இறந்தகாலம்
ஒன்றுமே உணர்த்தி நிற்றலானும், கொல் என்னும் முதல்நிலை வினை யானை என்னும்
பெயரொடு தொக்க தொகை ஆற்றலின் அது முக்காலமும் ஒருங்கு உணர்த்தி நிற்பதே
வினைத்தொகை என்பது பொருத்தம் உடைத்து என்க. கொல்கின்ற வினை-
கொல்லும்யானை- என்பனவும் அன்ன. 44
 

விளக்கம்
 

வினைப்பகுதி ஒருபெயரொடு சேரும் சேர்க்கைக்கண் முக்காலமும் காட்டும்
ஆற்றல் தோன்றும்; சேர்த்துக் காணாது வினைப்பகுதி வேறாகவும் அது சேர்ந்த பெயர்
வேறாகவும் பிரிப்பின் காலம் காட்டும் ஆற்றல் இல்லாது போய் விடும் என்பது.
 

  கொல்யானை - எழுவாயோடு வினைப்பகுதி இணைந்தது.
அரிவாள் - கருவியோடு ” ”
ஆடுஅரங்கு - நிலத்தோடு ” ”
செல்செலவு - செயலோடு ” ”
புணர்பொழுது - காலத்தோடு ” ”
செய்குன்று - செயப்படுபொருளோடு ”
 

பெயரெச்சம் கொண்டு முடியும் செய்வது ஆதிஅறு பொருட்பெயரொடும்
வினைப்பகுதி சேரும் சேர்க்கைபின் ஆற்றலால், இரண்டு சொல்லும் பிரிவில் ஒட்டாய்
மூன்று காலமும் காட்டும் ஆற்றல் பெறும் என்பது. இவற்றைப்