உம்மைத் தொகை இருபெயர் உம்மைத்தொகை, பல பெயர் உம்மைத்தொகை என இருவகைத்து இருவகையவும் அளவுப் பெயர்- உயர்திணை எண்ணியற் பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என்ற பொருண்மைகளில் வரும் என்பது. ‘கற்சுனைக் குவளை இதழ்’ என்ற தொடரில், கல்+ சுனை- கற்சுனை- ஏழன்தொகை. சுனை+ குவளை- சுனைக்குவளை- ஏழன்தொகை குவளை+ இதழ்- குவளைஇதழ்- ஆறன்தொகை எனவே ஏழன்தொகையாய்ப் புணர்ந்தன இரண்டும் தொக்குக் கற்சுனைக் குவளை எனஒருசொல் நீர்மையவாய்ப் பின் இதழ் என்பதனொடு தொகுதலின், இறுதிக்கண் தொகுவன இருபெயரேயாம் என்க. பெருந்தோட் பேதை என்ற தொடரில், பெரு+தோள்- பெருந்தோள்- பண்புத்தொகை. தோள்+ பேதை- இரண்டன்தொகை. பெருந்தோள் ஒருசொல் நீர்மைத்தாய்ப் பேதை என்பதனொடு தொகுதலின், தொகுவன இருபெயரேயாம். ஆகவே, ஏனைத்தொகைகள் தொகுமிடத்து இருபெயர்த்தொகையாகவே கொள்ளப்படும். ‘புலிவிற் கெண்டை’ என்ற தொடரில் புலி-வில்-கெண்டை- என்ற மூன்று பெயரும் வேறு தொடர்புஇன்றி உம்மைத்தொகை படவே தொகுதலின் பலபெயர் தொக்கனவேயாம் ஆகவே, உம்மைத்தொகை ஒன்றற்கே இரண்டிறந்த பலபெயர் தொகும் நிலை உண்டு என்பது விளக்கப்பட்டது. தூணிப்பதற்கு என்பதனைக் கலனும் தூணிப்பதக்கும் |