இஃது அன்மொழித்தொகை ஆமாறு கூறுகின்றது. இ-ள்: வேற்றுமைத்தொகை முதலாகிய ஐவகைத் தொகைமொழிக் கண்ணும் இறுதிச் சொற்கண்ணே நின்று நடக்கும் அன்மொழித்தொகை என்றவாறு. வேற்றுமைத்தொகை முதலியனபட அச்சொல் தொக்கபின் அத்தொகை அன்மொழித்தொகை ஆகாமையின் தொகுவதன் முன் அவற்றிற்கு நிலைக்களம் ஆகிய சொல் பற்றி வரும் என்பது விளக்கிய தொகையினும் என்னாது ‘மொழியினும்’ என்றார். இறுதிச்சொல் படுத்தல் ஓசையால் பொருள் விளக்குமாறு வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் காண்க. வரலாறு: பொற்றொடி- பவளவாய்- திரிதாடி- வெள்ளாடை- தகரஞாழல்- என முறையே வேற்றுமைத்தொகை முதலிய ஐவகை நிலைக்களத்தும் பிறந்த அன்மொழித்தொகை வந்தவாறு காண்க. இனி இவை பொற்றொடி தொட்டாள்- |