சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

672 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்


 
‘வினையின் தொகையினும் உவமத் தொகையினும்
அன்மொழி தோன்றும் என்மனார் புலவர்’- அவிநயம்

 


தொல்.சொல்.418.நச்.
என்ற மேற்கோள் நூற்பாவும் காட்டினார்.

நேமிநாதநூலார் ஐந்தொகைப் புறத்தும் அன்மொழித்தொகை கொண்டார்.
நே.சொல்.63

‘உண்ணாமுலை’ ‘முற்றாமுலை’ ‘பாயினமேகலை’ எனத் தொகாநிலைத் தொடர்ப்
புறத்தும் அன்மொழித்தொகை வரும் என்பது பிரயோக விவேக நூலார், சண்முகனார்-
ஆகியோர் கருத்தாகும்.

இனி வடநூலார் அன்மொழித்தொகையாகிய வெகு விரீகிசமாசனை எழு
வகையாகப் பிரிப்பர்.

துவிபதவெகுவிரீகி- இரதநூபுரசக்கிரவாளம்
                    வெகுபதவெகுவிரீகி- பொன்னேறு பூண்முலை
                    சங்கியோத்தரபதவெகுவிரீகி- கார் நாற்பது
                    சங்கியோபயபதவெகுவிரீகி- பத்தெட்டு
                    திகந்தராளபதவெகுவிரீகி- வடகிழக்கு
                    சகபூர்வபதவெகுவிரீகி- கெழுதகைமை
                    வியதிகாரலட்சண வெகுவிரீகி- கேசாகேசி
                    என்பது பிரயோக விவேகம். (24)

“வெகுபதம் உம்மைத்தொகைக்கண் அன்றி ஏனைத் தொகைக்கண்வாரா என்பர்
தமிழ்நூலார்; வரும் என்பர் வடநூலார். வியதிகாரலக்கணம்- அன்னியோன்னியம்-
இதரேதரம்- தடுமாற்றம்- இவை சமாநார்த்தகம். இவை பற்றிய வெகுவிரீகி வடமொழிக்
கண் அல்லது வாராது.

‘இனி வடநூலார் உம்மைத்தொகையில் வெகுவிரீகி வாராது என்றும், ஆநகதுந்துபி
(ஆநகமும்துந்துபியும் முழங்குமாறு அவதரித்த வசுதேவன்) என்பதனை மத்திய