மொழித்தொகையும் ஒன்றே என்றல் வடநூல் விதியோடு முரணுமாறு அறிக.’ என்று குறிப்பிட்டுள்ளார்.இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்று என்பதே உரையாசிரியர், சேனாவரையர், இந்நூலாசிரியர் இவர்களது கருத்தாகும். பிரயோகவிவேகநூலாரும் இதனை ஒருபுடை ஏற்றுள்ளார். தெய்வச்சிலையார் வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகைகளை இருபெயரொட்டாகுபெயராகக் கொண்டார். பண்புத்தொகையும் வினைத்தொகையும் ஒரு சொல் நீர்மைய ஆதலின், அவற்றுவழித் தோன்றும் அன்மொழித் தொகைகளை ஆகுபெயரென்றலே பரிமேலழகர் கருத்தாகும் என்பர் சிலர். ‘கனங்குழை’ என்பதனைப் பரிமேலழகர் ஆகுபெயர் எனவும், சிவஞான முனிவர் அன்மொழித்தொகை எனவும் கூறுமாறு அறிக. இத்தொடர் பற்றிச் சண்முகனார் உரைத்த ‘இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு’ என்ற கட்டுரையினை உள்ளிட்ட அன்மொழித்தொகை ஆராய்ச்சியினை இந்நூலின் பிற்சேர்க்கையில் காண்க. |