வினையோடு இயைதல்- முடிக்குஞ்சொல்லொடு பொருந்துதல். ‘உண்டான்’ என்ற சொல்லின்கண் உ- என்பது காலமுன்; ன்- என்பது இடமுன். அங்ஙனமே உ- என்பது இடபின்; ன்- என்பது காலப்பின். அடைகடல் என்புழி, அடை என்பது இடவகையான் ஆகும். அடையாகிய கடல் என்று பொருள்படின் இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இனிக் கடலது அடை என்று பொருள்படின் ஆறாம்வேற்றுமைத்தொகை. அடைஎன்பது கரை. உம்மைத்தொகை பன்மொழியிலும் பொருள் சிறக்கும். அன்மொழித்தொகை புறமொழியில் பொருள் சிறக்கும். ஏனைய தொகைகள் முன்மொழிக்கண்ணும் பின்மொழிக்கண்ணும் பொருள் சிறத்தல் இடம் நோக்கிக் கொள்க. பொருள் சிறந்த இடத்தை எடுத்தும், சிறவாத இடத்தைப் படுத்தும் ஒலித்திடுக. அன்மொழித்தொகை புறமொழியில் பொருள் சிறத்தலின், அத்தொகை முழுவதையும் படுத்தல் ஓசையாகவே ஒலித்திடுக. |