உணர்த்தி நிற்கும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: கபிலன் பரணன் என்புழிக் கபிலன் என்னும் னகர ஈறு சந்தியால் கெட்டுக் கபிலபரணன் என நின்றவழி இருபெயராய் நின்றமையின், வந்தார் என்னும் பன்மையோடு முடிய வேண்டுதலான் ஆண்டு நின்ற ஒருமை ஈறு பன்மையொடு முடிதல் வழு என்று கருதி னகர ஈறு ரகர ஈறாய் ஒலிக்கும் என வழு அமைத்தார். கல்லாடமாமூல பெருந்தலைச் சாத்தர் என்பன போல்வனவும் அன்ன. உயர்திணைப்பெயர் என்னாது ‘மருங்கின்’ என்றார்; உயர்திணை விரவுப்பெயரும் மயங்குதற்கு. 49 |