தீ தீ தீ (தண்டி.மேற்.) என்பது பொருள்நிலைக்கண் மும்முறை அடுக்கி வந்தது. இது விரைசொல் அடுக்கு. ஏனையவும் வந்துழிக் காண்க. ‘ஏஎஏஎ அம்பல் மொழிந்தனள் யாயே’- ‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’- ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’- இவை இசைநிறை. பிறவும் அன்ன. 52 |
விளக்கம் |
அசைநிலை இரண்டே முறை அடுக்கும்; பொருள்நிலை இரண்டு முறையும் மூன்று முறையும் அடுக்கும்; இசைநிறை இரண்டு முறையும் மூன்று முறையும் நான்கு முறையும் அடுக்கும். பொருள் நிலைக்கு எட்டுப் பொருண்மைகள் கூறப்பட்டுள்ளன. இடைவிடாமை, துணிவு முதலாகப் பிறவும் உள, |
ஒத்த நூற்பாக்கள் |
| | ‘இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல்என்று அவைமூன்று என்ப ஒருசொல் அடுக்கே.’
‘இசைப்படு பொருளே நான்குவரம்பு ஆகும்.’ ‘விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும்.’ ‘இசைநிறை நான்கு வரம்பாம்- அசைநிலை ஆய்ந்த ஒருசொல் அடுக்கிரண்டாம்.’ முழுதும் ‘அசைநிலை இசைநிறை அடுக்குஇரு திறத்தன.’
‘விரைவு மூன்றுஇசை நிலைநான் கடுக்கே,’ |
423 424
நே.சொல்.50 நன்.395,தொ.வி.198
மு.வீ.ஒ.93 106 |