சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-53685

இன்ன என்னும் குறிப்புரை
 

347



 
வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றுஅவற்று இயல்பான்
இன்ன என்னும் குறிப்புரை ஆகும்.
 

இது மரபுவழுக் காப்பதோர் ஒழிபு கூறுகின்றது.

இ-ள்: வாரா இயல்பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்னா
இயல்பினவற்றை என்பனவாகக் கூறுதலும் அத்தன்மையன எல்லாம் அவ்வப்
பொருள்களின் இயல்பான் இத்தன்மைய என்று சொல்லும் குறிப்புமொழியாம் என்றவாறு.

வரலாறு: அந்நெறி ஈண்டு வந்து கிடந்தது-
                    அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று- எனவும்,
                    அவல் அவல் என்கின்றன நெல்-
                    மழை மழை என்கின்றன பைங்கூழ்- எனவும் வரும்.

இவை வரவும் சொல்லுதலும் உணர்த்தாது இன்ன என்பதனைக் குறிப்பான்
உணர்த்தியவாறு காண்க.

‘அன்னவை எல்லாம்’ என்பதனான்,
                    இந்நெறி ஆண்டுச் சென்று கிடக்கும்-
                    இக்குன்று அக்குன்றோடு சென்று அணுகும்-
                    கடல் அத்துணை ஆழ்ந்து கிடக்கும்-
என்றல் தொடக்கத்தனவும்,
 

 ‘பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்’

‘மாய்தலும் பிறத்தலும் வளர்தலும் வீங்கலும்
தேய்தலும் உடைமை அத் திங்கள் செப்புமால்’
 

குறள்.709


சீவக.2932
 
என்றல் தொடக்கத்தனவும் கொள்க.