சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

690 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 


 

‘எஞ்சணி என்ப எளிதுணர் பலமொழி
துஞ்சில் சிறப்பல் தோன்றாது ஒழித்தலே.’

‘பெயர்வினை உம்மைசொல் பிரிப்புஎன ஒழியிசை
எதிர்மறை இசைக்குறிப்பு எஞ்சணி பத்தே.’
 



தொ.வி.318

319

பெயரெச்ச வினையெச்சங்கட்கு முடிபு
 

349முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும்.
 
 

இது உரைத்தாம் என்னும் உத்தி கூறுகின்றது.

இ-ள்: முற்கூறிய எச்சங்களுள் பெயரெச்சமும் வினையெச்சமும் முன்னர் முடிபு
கூறப்பட்டனவாம் என்றவாறு.
அவையாவன:

‘அவற்றுள்
செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டின்
செய்வது ஆதி அறுபொருள் பெயரொடு
முடியும் முறையது பெயரெச் சம்மே’
எனவும்
‘வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபுஆ கும்மே
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே’



248



249
 
எனவும் முற்கூறிப் போந்தவாம் எனக் கொள்க.

அற்றேல் ஈண்டு எச்சங்களொடு கூட்டி ஓதியமையான் போந்தது என்னை எனின்,
சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் என எச்சங்களைப் பகுத்தலின் ஆண்டுப் பெறப்படாத
சொல்லெச்சம் ஆதல் அவற்றிற்கு எய்துவித்தல் என்க. 55
 

விளக்கம்
 

உரைத்தாம்- முன்னர்க் கூறினாம் என்பது. இந்நூலுள் உத்திவகை பொருளதிகாரப்
பாட்டியலுள் கூறப்பட்டுள்ளது. பெயரெச்சமும் வினையெச்சமும் எஞ்சு
பொருட்கிளவியான் முடியும் சொல்லெச்சமாக வருதல் உண்மையான், அவையும் ஈண்டுக்
கூறப்பட்டன என்பது இவ்வாசிரியர் கருத்து.