பெருஞ்சேந்தனையே உணர்த்திப் பிரிவிலதாய் நிற்றலின் கடியப்படாது என்க. |
| ‘பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ நற்பூங் கழலான் இருதிங்கள் நயந்த வாறும் கற்பாடு அழித்த கனமாமணித் தூண்செய் தோளான் வெற்பூடு அறுத்து விரைவின்னெறிக் கொண்டவாறும்’ |
சீவக.19 |
என்பதும் அது. இவ்வாறே சான்றோர் செய்யுளில் பயின்று வருமாறும் உணர்க. |
61 |
விளக்கம்
|
கூத்தப்பெருஞ்சேத்தனே காலேகவண்ணன் என்பது அறிக. நற்பூங்கழலானே கற்பாடு அழித்த கனமா மணித்தூண்செய் தோளானும் ஆவன் என்க. இவற்றுள் பின்தொடர்கள் தனிச்சிறப்புடைய பொருள் தாராது சுட்டுப்பொருளவாய் நிற்குமாறும் அறிக. இக்கருத்தை, |
| பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ | சொல்.37 |
என்ற நூற்பாஉரையுள் நச்சினார்க்கினியர் கூறி, இந்நூற்பாவிற்கு இரட்டுறமொழிதலைப் பொருளாகக் கொள்வர். இந்நூற்பா விளக்கம் சேனாவரையர் உரைத்ததே. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார்.’
முழுதும் | தொல்.சொல்.460. மு.வீ.ஒ.124 நன்.397 |