உரை சேனாவரையர் உரையே. உறு பொருள் முதலிய நான்கும் விசேடித்தே வரும் உரிச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுக்களாம். குருமணி, விளங்குகுரு முதலிய நான்கும் முன்னர் விசேடித்தும் பின்னர் விசேடிக்கப்பட்டும் ஒரு சொல்லே வருதற்கு எடுத்துக்காட்டுக்களாம். குரு விளங்கிற்று முதலியன விசேடிக்கப்பட்ட உரிச்சொற்களாம். ஆகவே இடைச்சொல் விசேடித்தே வரும் என்பதும், உரிச்சொற்களுள் விசேடித்தே வருவனவும் உள, விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் வருவனவும் உள என்பதும் உணர்த்தப்பட்டன. இந்நூற்பாக்கள் ஈண்டு வைக்கப்பட்டதன் காரணம் காட்டப்பட்டுள்ளது. |